Monday, April 14, 2008

சிறப்புமிகு வெள்ளிவிழா
சென்னை,அடையாறு,கத்தூரிபாய்நகரில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக
வாடிக்கையாளரின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக இயங்கிவரும் சுப்ரஜா சீட்டு&நிதி நிறுவனம் சித்திரை முதல் நாளில்(௧௩/௪/௨00௮) தனது வெள்ளிவிழாவைச் சிறப்புறக் கொண்டாடியது.
சென்னை,சைதாப்பேட்டை,அரசு அலுவலர் குடியிருப்பு வளாகத்தில்(டாடண்டர் நகர்)அமைந்துள்ள கலைஞர் சமூகக்கூடத்தில் மாலை ஐந்தரை மணிக்குத் தொடங்கிய இவ்விழாவுக்கு இந்நிறுவனத்தின் மேனாள் செயல் இயக்குநர் திரு.பொ.சேதுபாண்டியன் தலைமை தாங்கினார்.
முதலில் விழாவுக்கு வருகைபுரிந்த அனைவரையும் இந்நிறுவனத்தின் புரவலர் பேராசிரியர் செ.சுப்பிரமணியன் வரவேற்றார்.
தமிழ்நாடு அரசின் திட்டக்குழுத்துணைத்தலைவர் முனைவர் மு.நாகநாதன்
வெள்ளிவிழாமலரை வெளியிட்டார்.நிறுவனத்தின் மூத்த வாடிக்கையாளர்
திருமலைநம்பி முதல் படியைப் பெற்றுக்கொண்டார்.
திட்டக்குழுத் துணைத்தலைவர் தமது சிறப்புப்பேருரையில் இந்தியப்பொருளாதார வளர்ச்சிடயில் நிதிநிறுவனங்கள் ஆற்றவேண்டிய பணியைப் parrrrக்கமாக எடுத்துரைத்தார்.
நடுத்தரவருக்கத்தினரின் ஏமாளிப்பண்பைப் பயன்படுத்திப் பல நிறுவனங்கள் மோசடி புரிந்த துயர்மிகுநிலையையும் படித்தவர்களே ஏமாறும் சூழல் தமிழ்நாட்டில் மிகுந்திருப்பதையும் கூறிய அவர்,சுப்ரஜா சீட்டு&நிதி நிறுவனம்
நேர்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் செயலாற்றும் திறத்தினைப் பாராட்டினார்.
சுப்ரஜா நிறுவனம் மிகவும் சிறப்பாக வாடிக்கையாளர் சேவை புரிந்துவருவதால் தாம் தொடர்ந்து இந்நிறுவனத்தில் சீட்டுக்குழுவில் அவர் கூறியது,சுப்ரஜாவின் பணிகளுக்கு வைத்த மணிமகுடமாகத் திகழ்ந்தது.
அவரை அடுத்து,பாலுசேரி நிதி நிறுவனத்தின் இயக்குநர்,திரு.வைத்தியநாதன்
வாழ்த்துரை வழங்கினார்.சுப்ரஜா நிறுவனத்தின் புரிந்துவரும் சிறப்புமிகு பணியைப் பாராட்டிய அவர்,நடுத்தர வகுப்பினர் இந்நிறுவனத்தின் சீட்டுக்குழுக்களில் சேர்ந்து சிறந்த பயன் அடைய வேண்டும் என வேண்டிக்கொண்டார்.
தாராபுரம் கோட்ட ஆட்சியர் புலவர் நாகராஜன் கோடையிடி என முழங்கினார்;கவிதைமழை பொழிந்தார்.சுப்ரஜா நிறுவனத்தின் செயல் இயக்குநர் கி.ப.தமிழ்வண்ணனுக்கும் தமக்குமிடையேயான நட்பின் திறத்தை நவின்றார்.நாணயமும் நம்பகத்தன்மையும் இரு கண்களாகக் கொண்டு செயற்படும் சுப்ரஜா நிறுவனத்திற்கு நல்வாழ்த்துக் கூறினார்அவையினர் அவர்தம் பொழிவின் தமிழ்ச்சுவையில் ஆழ்ந்தனர்.
அனைத்திந்திய வங்கி அலுவலர் சங்கப் பொதுச்செயலாளர் திரு ஆர்.ஜெ.ஸ்ரீதரன் பொருளாதாரக் கோட்பாடுகளை விளக்கி,நடுத்தரவகுப்பினர்
சீட்டுக்குழுக்களில் சேர்ந்து பயனடைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.சுப்ரஜா நிறுவனத்தின் தனிச்சிறப்புகளைக் கூறினார்.
இறுதியாகப் பேசிய பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தமக்கும் இந்நிறுவனத்தின் புரவலர் சபேராசிரியர் செ.சுப்பிரமணியனுக்கும் இடையேயான நாற்பதாண்டுக்கால நட்பையும் சுப்பிரமணியனின்
ஆளுமைத்திறத்தையும் விளக்கினார்.
கடந்த இருபத்தைந்தாண்டுகளாக மோசடி நிதிநிறுவனங்கள் நடுத்தர வகுப்பினருக்கு அளித்துவரும் தொல்லைகளையும் நசுப்ரஜா நிறுவனம்
ஆற்ரிவரும் ஒப்பற்ற பணியையும் அவர் விரிவாக விளக்கினார்.
மேனாள் செயல் இயக்குநர் திருபொ.சேதுபாண்டியன் விதிமுறைகளைக் கடைப்பிடித்த சீர்மிகு முறையையும் இன்னார் இனியர் என வேறுபாடு கருதாது அவர் போற்றிய நடுநிலையுணர்வையும் சிறப்பாகக் கூறினார்.
வேலைப்பண்பாடு என்னும் சீர்மிகு பண்பாடும் வாடிக்கையாளர் சேவையும் சுப்ரஜாவில் எத்துனைச் சிறப்பாகத் திகழ்கின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.இவ்வகையில் சுப்ரஜாவுக்கு இணையாகத் தாம் கருதுவது டி.வி.எஸ்.நிறுவனம் ஒன்றையே என அவர் கூறினார்.
இருபத்திரண்டாண்டுகளாகத் தொடர்ந்து சுப்ரஜா சீட்டுக்குழுக்களில்
சேர்ந்து தாம் அடைந்த நன்மைகளையும் அவர் நன்றியுணர்வு பொங்கக் குறிப்பிட்டார்.
மொத்தத்தில் இவ்விழா ஒரு குடும்பநிகழ்ச்சியாக,வாடிக்கையாளர் அனைவரும் தமது நிறுவனத்திற்கு வாழ்த்துக்கூறும் நிகழ்வாக்,தமிழ்மணம் கமழும் பண்பாட்டுப் பலகணியாக்,ஒன்றுபட்ட உள்ளங்களின் சங்கமமாகத் திகழ்ந்தது எனல் உணமை;வெறும் புகழ்ச்சியில்லை.
“அடுத்ததாக இந்நிறுவனத்தின் பொன்விழாவில் நாம் அனைவரும் சந்திப்போம்” என மறைமலை கூறியபோது அவையினர் எழுப்பிய ஆரவாரம் இதற்குச் சான்றாகும்.