சென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தில்
பேராசிரியர் மறைமலை இலக்குவனார் 'வாழும் தமிழ்க்கவிஞர்கள்'எனும் த்லைப்பில் பாரதிதாசன் மரபுக் கவிஞர்களைப்பற்றிய தொடர்பொழிவு நிகழ்த்திவருகிறார்.தொண்ணூற்றிரண்டாம் (92) பொழிவாக
“எழிலன் கவிதைகள்” என்னும் தலைப்பில் 11/3/2008 அன்று பொழிவு நிகழ்த்தினார்.இதற்குத் தலைமை தாங்கியவர் கவிஞர்.வாசல் வசந்தப்பிரியன் ஆவார்.இவர் ‘வாசல்'என்னும் அமைப்பின் மூலம் ஒவ்வொரு திங்களும்
பல்வேறு கவிஞர்களை அரங்கேற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமது தலைமையுரையைக் கவிதையாகவே இவர் வழங்கினார்.
மறைமலை இலக்குவனார் தமது ஆய்வுரையில் எழிலன் இயற்றிய
கவிதைகளின் தொகுப்புநூல்கள் மூன்றினையும் விரிவாக ஆய்வு செய்தார்.
திருக்குவளைத் தேனமுது, நம்பிக்கை நாதம், தேடிவரும் தென்றல் என்னும் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள பல்வேறு கவிதைகளின் நலம்பாராட்டிப் பேசினார்.தமது கவிதைகளில் இயைபுத்தொடையைச் சிறப்பாக எழிலன் அமைத்துள்ளார் எனக் கூறி அதற்குப் பல்வேறு சான்றுகளை அவரது
கவிதைகளிலிருந்து எடுத்துக்காட்டினார்.அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தின் போது எழிலன் படைத்த கவிதைகளைப் பாராட்டி அவரது சமுதாயச்சிந்தனைகளையும் விரிவாக அவரது கவிதைகளின் மூலம் விளக்கினார்.குமரிச்செழியன் வரவேற்புரையும் பட்டிமன்றச்செயலாளர் பக்தவத்சலம் அவர்களின் நன்றியுரையும் விழாவுக்கு மேலும் மெருகூட்டும் வகையில் அமைந்தன.
Thursday, March 13, 2008
Subscribe to:
Posts (Atom)